வறிய குடும்பங்களுக்கு 20000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்! சஜித் பிரேமதாச
நாட்டின் அனைத்து வறிய குடும்பங்களுக்கும் மாதாந்தம் சுமார் இருபதாயிரம் ரூபா வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சேருவாவில பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தமது ஆட்சியின் கீழ் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவு
சனசவிய, சமுர்த்தி மற்றும் அஸ்வெசும உள்ளிட்ட சமூக நலன்புரித் திட்டங்களின் நல்ல பண்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய புதிய திட்டம் உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டத்தின் கீழ் இருபத்து நான்கு மாதங்களில் வறுமையை ஒழிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri