அரசியல் பதற்ற நிலைக்கு மத்தியில் தென்னிலங்கையில் ஒன்றுகூடிய முக்கிய அரசியல்வாதிகள்
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில், பிரபல அரசியல்வாதிகள் ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
பொதுவான நிகழ்வு ஒன்றில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒரே இடத்தில் ஒன்றுகூடியமை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசும்பொருளாக மாறியுள்ளது.
பிரபல ஊடகவியலாளர் ஒருவரின் மகனின் திருமண நிகழ்வு நேற்றிரவு பெரடைஸ் இன் பொல்கொட ஹோட்டலில் நடைபெற்றது.
ஒன்றுகூடிய முக்கிய அரசியல்வாதிகள்
இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹேரத், பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மேர்வின் சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, வஜிர அபேவர்தன, கரு ஜெயசூரியா, அஜித் நிவார்ட் கப்ரால், ரஞ்சித் மத்துமபண்டார, தயாசிறி ஜெயசேகர, அகில விராஜ் காரியவசம், எரான் விக்ரமசிங்க, கவிந்த ஜெயவர்தன, இம்தியாஸ் பாகிர் மகர், சரித ஹேரத், சுசில் பிரேமஜயந்த, ஆஷு மாரசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஒன்றுகூடலின் போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அரசியல் நிலைமை
அவர்கள் வட்ட மேசைகளில் அமர்ந்து தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நீண்ட விவாதங்களை நடத்தியதாகவும் அறியப்படுகிறது.
சமகால அநுர அரசாங்கம் முன்னாள் அரசாங்கத்தின் போது பல்வேறு ஊழல் மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறானவர்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களும், அடுத்து வரும் வாரங்களில் கைது செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கும் அரசியல்வாதிகளும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் சமகால அரசாங்கத்தின் பிரதான அமைச்சருடன் மிகவும் சுமூகமான நட்புறவை வெளிப்படுத்தியிருந்தமை குறித்து பலரின் அவதானமும் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
