மூன்றாம் தர ஊடகவியலாளர்கள் எவரும் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்படவில்லை - கெஹெலிய
மூன்றாம் தர ஊடகவியலாளர்கள் எவரும் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்படவில்லை என்று ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சின் துணை பணிப்பாளர் கலாநிதி ஹேமந்த ஹேரத் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே அமைச்சர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
கடந்த காலத்தில் கொல்லப்பட்ட சில ஊடகவியலாளர்கள் மூன்றாம் தர ஊடகவியலாளர்கள் என்று ஒரு ஊடக மாநாட்டிற்குப் பின்னர் ஹேரத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரின் கருத்து தம்மைக் குறிப்பதாகச் செய்தியாளர்கள் நினைத்தால், அதற்காக வருந்துவதாக அமைச்சர் கூறினார்.
எந்தவொரு உறுப்பினரும் மூன்றாம் தரம் என்று அழைக்கப்படுவதைத் தாம் விரும்பவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹேமந்த ஹேரத் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஊடக உரிமைகள் குழுக்கள் கோரியுள்ளன.
சுதந்திர ஊடக இயக்கம், ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை
உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், இலங்கை முஸ்லிம் மீடியா போரம் , இலங்கை
தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம் மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியன
இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.