தனது சூழ்ச்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய ரணில்! யுத்தத்தின் பின்னணியை ஞாபகப்படுத்திய பீரிஸ்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்கு தயார் இல்லை.பொருளாதார பாதிப்பு என கூறிக்கொண்டு தேர்தலை நடத்தாமல் பலவந்தமான முறையில் அதிகாரத்தில் இருப்பதற்காக அவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மக்களின் அடிப்படை உரிமைகள்
சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,“ஜனநாயகத்தை படுகொலை செய்து பொருளாதாரத்தை பாதுகாக்க முடியாது என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஜனநாயக ரீதியில் இடமளிக்காவிட்டால் நாட்டு மக்கள் ஜனநாயகத்திற்கு எதிரான வழிமுறையில் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள்.
யுத்தத்தின் பின்னணி
நிறைவேற்றுத்துறை அதிகாரம் தேர்தல் உரிமையை பறிக்கும் போது நாட்டில் பாரிய விளைவுகள் தோற்றம் பெற்றன. 30 வருட கால யுத்தம் இவ்வாறான பின்னணியில் தான் தோற்றம் பெற்றது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டுக்கு இடமளித்தால் நாடு பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.
ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டினால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம் மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க எதிர்வரும் வாரம் முதல் அரசியல் ரீதியான போராட்டத்தில் ஈடுபடுவோம்.”என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
