அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உடன்பாடு அவசியம்:ரூஸ்வெல்ட்டின் உடன்பாட்டால் அமெரிக்க முன்னேறியது
உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாது என்றால் ஒருவருக்கு அரசியல் செய்ய முடியாது எனவும் உடன்பாடுகள் இல்லை என்றால், அரசியலில் ஸ்திரத்தன்மை இருக்காது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று நடைபெற்ற காலி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களின் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
“ தேசிய கொள்கை வரைவு ஒன்றையே அரசியலமைப்புச் சட்டத்தில் முதலில் நிறைவேற்ற வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.
19, 20, 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றினாலும் அவற்றால், எரிவாயு, எரிபொருள், மருந்து, அத்தியவசியப் பொருட்களை விநியோகிக்க முடியாது. அரசியலமைப்புத் திருத்தங்கள் என்பது அரசியல்வாதிகளின் தேவைகள் மாத்திரமே.
அவை ஒவ்வொரு அரசியல்வாதியின் இலக்கை முழுமைப்படுத்த தேவையான ஆவணம் மட்டுமே. 21வது அரசியலைமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறுவதை நான் கேட்டேன்.
அதனை கொண்டு வந்தால், பரவாயில்லை. அதன் மூலம் பொருளாதாரம் வலுவடைய வேண்டும். எனினும் 20 ஆண்டுகளுக்கு மாற்றப்பட முடியாத தேசிய கொள்கையே தற்போது தேவைப்படுகிறது.
என்னையும் சிலர் உடன்பாட்டுக்காரன் எனக் கூறுகின்றனர். உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாது என்றால், அவருக்கு அரசியலில் ஈடுபட முடியாது. ரணில் விக்ரமசிங்க உடன்பாடுகளை ஏற்படுத்துபவர், வஜிர உடன்பாட்டு அரசியல்வாதி என கூறுகின்றனர்.
உடன்பாடுகள் இல்லை என்றால், அரசியலில் ஸ்திரத்தன்மை இருக்காது. பொருளாதார ரீதியான உடன்பாடுகளை ஏற்படுத்தவில்லை என்றால், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. உடன்பாடு எனும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
அமெரிக்காவின் 32 வது ஜனாதிபதியாக பதவி வகித்த ரூஸ்வெல்ட் (Franklin Delano Roosevelt)1929 முதல் 1933 வரை வரலாற்று சிறப்புமிக்க உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டார்.
அது அரசியல் மற்றும் பொருளாதார உடன்பாடு. ரூஸ்வெல்ட்டின் இந்த உடன்பாடு காரணமாக அமெரிக்க உலகில் பலமிக்க நாடாக உருவெடுத்தது.
அப்போது ஏற்பட்டிருந்த பிரச்சினைகளை தீர்க்க 50 உயர் மட்ட வர்த்தகர்களை அறை ஒன்றுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். நாட்டை முன்னேற்றும் முடிவுகளை எடுத்த பின்னரே பேச்சுவார்த்தை முடிந்தது என அறிவிக்கப்பட்டது.
இலங்கையிலும் உயர் மட்ட வர்த்தகர்கள் இருக்கின்றனர். அவர் அமர்ந்து எப்படி நாட்டை கட்டியெழுப்பது என்பது குறித்து தொடர்ந்தும் கலந்துரையாட வேண்டும். அப்படி இணைந்து பணியாற்றியதன் காரணமாக அமெரிக்க முன்னேறியது” எனவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்