மக்களின் வயிற்றில் விழுந்த அடி - இரத்தக் கண்ணீரில் இலங்கை!
கொதிநிலையில் தென்னிலங்கை அரசியல் உச்சக்கட்டத்தை தொட்டு நிற்கிறது. தற்போதைய கோட்டாபய அரசின் விம்பம் மெல்லமெல்ல உடைந்து கொண்டிருக்கும் நிலையில், செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள் மக்கள்.
நாளுக்கு நாள் கோவிட் தொற்றின் எண்ணிக்கையும் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டிருக்கையில், எரிபொருள் விலையேற்றம் மக்களை கடுமையாக கொந்தளிக்கச் செய்திருக்கிறது.
எரிபொருள் விலையேற்றத்துடன், அது நின்றுவிடாது, பாண், பால்மா, அரிசி என்று அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாக உருவெடுத்திருக்கிறது.
இது போன்ற இலங்கையின் சமகால அரசியல் தொடர்பான விமர்சனங்களை தாங்கி வருகின்றது நிஜக்கண் விசேட தொகுப்பு,