நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதியில் பெண் வேடமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய, புடவை அணிந்து பெண் போன்று நீளமான முடி அணிந்து பொருட்களை திருடிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
கொள்ளையர்கள் அட்டகாசம்
ராஜித குருசிங்க பொலிஸ் அதிகாரி சந்தேக நபரை கைது செய்ததுடன், திருடப்பட்ட ரைஸ் குக்கர், தண்ணீர் மோட்டார், பித்தளை பூச்சாடி, பீங்கான் கோப்பைகள் உள்ளிட்ட பல பொருட்களை மீட்டனர்.
சந்தேகநபரின் வாக்குமூலத்தின்படி, களுத்துறையில் பெண் வேடமிட்டு, அயலார் வீடுகளுக்குள் பிரவேசிக்கும் போது, அயலவர்களுக்கு சந்தேகம் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் எச்சரிக்கை
அதற்காக பயன்படுத்தப்பட்ட 7 புடவைகளையும் கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெண் வேடமிட்டு புதிதாக யாராவது நடமாடுவதனை அவதானித்தால் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 22 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
