இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை
தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட செய்தியல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“அனைவரும் படிக்க வேண்டிய பொலிஸ் செய்தி - பொருளாதார நெருக்கடியில் ஜாக்கிரதை” என 22 விடயங்கள் உள்ளடக்கப்பட்டு, இறுதியில் அவதானமாக இருங்கள் - பொலிஸ் திணைக்களம் என இந்த போலி தகவல் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அவ்வாறான செய்தி எதுவும் வழங்கப்படவில்லை எனவும், பொலிஸார் ஒரு விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்க விரும்பினால், ஊடகப் பிரிவிலிருந்து ஊடக அறிவித்தலை வெளியிடுவதாகவும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த போலி செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என பொதுமக்களை அறிவுறுத்தி வரும் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், போலி செய்திகளை வெளியிட்ட நபர்களை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 5 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
