பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் "இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு" (Awareness by the Sri Lanka Police Department) என்ற தலைப்பில் பரவி வரும் போலிப் பதிவுகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அனைத்து உத்தியோகபூர்வ விழிப்புணர்வு செய்திகளும் பொலிஸ் ஊடகப் பிரிவினால் (Police Media Division) மட்டுமே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ ஊடக அறிக்கைகள் முறையான தலைப்பு (Letterhead) மற்றும் இலச்சினையுடன் மட்டுமே வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி அறிவித்தல்கள் மற்றும் தகவல்கள் பொலிஸ் ஊடகப் பிரிவினால் நிர்வகிக்கப்படும் உத்தியோகபூர்வ கணக்குகள் மற்றும் சேனல்கள் ஊடாக மட்டுமே பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் பெயரில் போலியான பதிவுகளை வெளியிடும் தனிநபர்கள் அல்லது குழுக்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் ஏதேனும் திட்டமிட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியா என்பது குறித்து கண்டறிய விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சமூக வலைதளங்களில் பகிரப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
துல்லியமான தகவல்களைப் பெறுவதற்கு உத்தியோகபூர்வ ஊடகப் பிரிவின் தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
போலிச் செய்திகள் பரப்பப்படுவது தெரிந்தால் அல்லது அது குறித்து சந்தேகம் இருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது பொலிஸ் ஊடகப் பிரிவிற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! Manithan