பொலிஸார் கோவிட்டை பயன்படுத்தி மக்களை துன்புறுத்துகின்றனர் – மனித உரிமை கண்காணிப்பகம்
இலங்கை பொலிஸார் கோவிட் சுகாதார விதிகளைப் பயன்படுத்தி மக்களைத் துன்புறுத்தி வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை பொலிஸார் கோவிட் சட்டங்களையும், போதைப்பொருள் தடுப்பு சட்டங்களையும் பயன்படுத்தி மக்களைக் கொல்வதாகவும் மக்களைத் துன்புறுத்துவதாகவும் மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.
சட்டவிரோத படுகொலைகள், சித்திரவதைகள், பலவந்த தடுத்து வைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து சுயாதீனமாகக் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும், அர்த்தமுள்ள வகையில் விசாரணை நடாத்தித் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.
குற்றச் செயல்களுக்குப் பொறுப்பு கூறுதல் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் வரையில் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் குறித்த அலுவலகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் இலங்கைக்கு உதவுவதனை இடைநிறுத்திக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இலங்கை பொலிஸார் கடந்த கால தவறுகளை மேலும் தொடர்வதாகவும், பிழைகளைத் திருத்திக் கொள்ள முயற்சிக்கவில்லை எனவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பு, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கள் பொறுப்பு கூறுதல் தொடர்பில் உரிய முனைப்புக் காட்டுவதனை ஊக்கப்படுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 10 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
