தப்பிச் சென்ற கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் பொலிஸார்
பொலநறுவையில் கொரோனா சிசிக்சை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஐந்து பேரில் நால்வரை இன்னமும் கைது செய்ய முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தப்பி சென்ற கொரோனா நோயாளிகளான சிறைக்கைதிகளை கைது செய்ய உதவுமாறு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பொலநறுவை, கல்லேல்ல கொரோனா சிசிக்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் நேற்று அதிகாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்றைய தினம் அவர்களில் ஒருவர் மாத்திரம் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஏனையவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் பொலநறுவை தலைமை பொலிஸ் பரிசோதகரின் 071 859 1233 என்ற இலகத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri