முகக்கவசம் அணியாதவர்களை தூக்கி சென்ற பொலிஸார்
முகக்கவசம் அணியாத 30 பேர் பண்டாரவளையில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலக தலைமையில் பண்டாரவளை நகர பகுதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பண்டாரவளை நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை பொலிஸார் தூக்கி சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
பண்டாரவளை நகரப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.