காலிமுகத்திடலில் தடை இல்லை: வடக்கு - கிழக்கில் ஸ்ரீலங்கா பொலிஸார் அடாவடி (Photos)

Police Army Batticaloa Tribute
By Kanamirtha Apr 19, 2022 04:31 PM GMT
Report

அகிம்சாவாதி பூபதி அன்னையின் 34வது சிரார்த்த தினத்தில் சமாதியில் அஞ்சலி செலுத்தத் தடைகள் விதிக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். 

அதில் மேலும், காலிமுகத்திடலில் கோவிட்டிற்கு தடையில்லை, வடக்கு கிழக்கில் தான் தடைக்கு மேல் தடைகள், தவறான தகவல்களைக் கொடுத்துத் தடையுத்தரவுகள் எடுக்கின்றனர் பொலிஸார்.

நீதிமன்ற உத்தரவால் அதனை மதித்து நடந்தோம் என குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

காலிமுகத்திடலில் தடை இல்லை: வடக்கு - கிழக்கில் ஸ்ரீலங்கா பொலிஸார் அடாவடி (Photos) | Police Stop Paying Homage Mother Bhupathi S Tomb

காலிமுகத்திடலில் தடை இல்லை: வடக்கு - கிழக்கில் ஸ்ரீலங்கா பொலிஸார் அடாவடி (Photos) | Police Stop Paying Homage Mother Bhupathi S Tomb

முதலாம் இணைப்பு

மட்டக்களப்பு - நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் 34ஆவது நினைவேந்தலை அவரது சமாதியில் செய்வதற்கு அவரது மகள் மற்றும் உறவினர்களை இன்று பொலிஸார் நினைவேந்தலைச் செய்வதற்குச் செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளதாக அன்னை பூபதியின் மூத்தமகள் லோகேஸ்வரன் சாந்தி கவலை தெரிவித்துள்ளார்.

சீலாமுனை பகுதியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் மகளின் வீட்டில் அவரது குடும்பத்தினர் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து பூபதியின் மகள் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று எனது தாயாரான அன்னை பூபதியம்மாவின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் அதனைவிட்டு நாவலடியில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எனது குடும்பத்தினர் சென்றோம். அப்போது அங்கு இருந்த பொலிஸார் எங்களை விசாரித்துவிட்டு நீதிமன்ற உத்தரவு என ஒரு பேப்ரை வாசித்துவிட்டு அவர் விடுலைப்புலிகளுக்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

எவரும் அஞ்சலி செலுத்த முடியாது என தெரிவித்து அங்கு அஞ்சலி செலுத்த விடாது தடுத்தனர். எமது தாயார் அப்போது அம்பாறை அன்னையர் முன்னணி சார்பில் அமைதியான முறையில் இந்திய இராணுவத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார் எனவும் என பொலிஸாருக்கு எடுத்துரைத்தேன்.

இருந்தபோதும் எங்கள் மூன்று பேரையும் அஞ்சலி செலுத்த விடாது பொலிஸார் தடுத்ததையடுத்து அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்துள்ளோம்.

கடந்த 3 வருடங்களுக்கு முதல் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அப்போது எனது தாயாருக்குச் சென்று அஞ்சலி செலுத்தவேண்டும் அதற்கு தடை இல்லை எனவும் அவருடைய அஞ்சலியைத் தொடர்ந்து செய்துவரவேண்டும் அதற்கான உரிமை இருக்கின்றது என அவர் தெரிவித்தார். ஆனால் இப்போது பொலிஸார் தடுக்கின்றனர்.

எனவே என்தாயாருக்கு அஞ்சலி செலுத்தப் பிள்ளைகளுக்கு உரிமை இல்லையா? எனவே இதற்கு நடவடிக்கை எடுத்து தரவேண்டும். அதேவேளை அன்னை பூபதியை வைத்து அவரின் பிள்ளைகளுக்கு உதவுவதாக எனது உறவினர் உட்படச் சிலர் வெளிநாடுகளில் பணம் வசூலித்து மோசடி செய்கின்றனர். எங்களுக்கு எனது சகோதரங்களுக்கோ ஒரு உதவியும் தரப்படவில்லை.

அதேவேளை அரசியல் வாதிகள் உட்படப் பலர் வந்து அன்னை பூபதியின் சமாதியை அபிவிருத்தி செய்வோம். பூங்கா அமைப்போம் சிலைவைப்போம் எனத் தெரிவித்து வாக்குறுதி தந்துவிட்டுச் சென்றவர்கள் சென்றவர்கள் தான்.

எனவே இவ்வாறான நிலையில் இன்று நாங்கள் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு பொலிஸார் தடுத்து நிறுத்தியது மிகவும் மனவேதனையான விடையம் எனவே எதிர்வரும் காலத்தில் அவரது பிள்ளைகள், உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காவது அனுமதியைப் பெற்றுத்தர அனைவரும் உதவ வேண்டும்'' இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US