கடமை நேரத்தில் போதையில் உறங்கிய பொலிஸாரிற்கு நேர்ந்த கதி
பணி நேரத்தில் சீருடையில் இருந்த அதிகாரிகள் குழு ஒன்று மதுபோதையில் ஒழுங்கற்ற முறையில் உறங்கும் வகையில் வெளியான காணொளி குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பதில் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
இந்நிலையில், அதிகாரிகளின் நடத்தை குறித்து அந்தந்த பிரிவுகளில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
@lankasrinews கடமை நேரத்தில் மதுபோதையில் ஆழ்ந்த உறக்கம்! #police #srilankapolice #srilankanews ♬ original sound - LANKASRI TAMIL NEWS
அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இதுபோன்ற தவறான நடத்தைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri