விசர் நாயை துப்பாக்கியால் சுட்ட பொலிசார்! பார்த்துக்கொண்டு நின்ற நபர் காயம்
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் விசர் பிடித்த நாயை துப்பாக்கியால் சுடும்போது, அங்கிருந்த நபரொருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
குறித்த நாய் அப்பகுதியில் சுமார் 10 பேரை நாய் கடித்ததாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று காலை 10.30 மணியளவில் களுத்துறை தெற்கு வெட்டுமகட பகுதியில் குறித்த விசர் நாய் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் சம்பவ இடத்திலேயே நாய் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த 60 வயது முதியவர் ஒருவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் களுத்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
