சட்டவிரோதமாக பயணித்த கனரக வாகனம்:பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
பளை பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த கனரக வாகனத்தை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கனரகவாகனம் நேற்று(24) இரவு மீசாலை- புத்தூர் வீதியின் கனகம்புளியடி சந்தியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவுவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் நேற்று(24) இரவு வாகன சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
தப்பியோட்டம்
இதன்போது, குறித்த கனரக வாகனத்தை மறிக்க முற்பட்ட வேளை பொலிஸாரின் சமிக்கையை மீறி அச்சுறுத்தும் வகையில் பயணித்துள்ளது.
இதனையடுத்து, ஆணித்தடையை போட்டு கனரக வாகனத்தை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சாரதியும், உதவியாளர்கள் இருவரும் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


