மன்னாரில் சூட்சுமமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது
மன்னாரில் சூட்சுமமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 டிப்பர்களை சாவகச்சேரி பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றையதினம்(25.06.2025) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியின் தனங்கிழப்பு பகுதியில் வைத்து குறித்த 3 டிப்பர்களையும் பிடித்ததுடன் டிப்பர் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூட்சுமமான முறையில் கடத்தல்
புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தினால் வழங்கப்படும் ஆற்று மற்றும் தரை மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தில் மாற்றம் செய்து மிகவும் சூட்சுமமான முறையில் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அனுமதிப்பத்திரம் தரை மணல் ஏற்ற வழங்கப்பட்தாகவும் இதில் மாற்றம் செய்து ஆற்றுமண் ஏற்றி வந்ததனை புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன உறுதி செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


