பெண் ஒருவரை கைது செய்ய பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்
தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை கைது செய்ய ரக்வானை பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி, ரக்வானை பொலிஸ் பிரிவின் கலஹிட்டிய, பெலவத்த வீதி, கொடகவெல பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தன்னிடமிருந்து 364,000 மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ரக்வானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டாளரின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்த பெண் இந்தத் திருட்டை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்க நகைகள்
மேலும் சந்தேக நபர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 071-8591394 அல்லது 071-8593808 என்ற தொலைபேசி ஊடாக அழைக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 1 மணி நேரம் முன்
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam