உடனே அறிவிக்கவும்! பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
சீதுவை பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
கடந்த ஆண்டு (2024) டிசம்பர் 28 ஆம் திகதியன்று,நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் குறித்த நபர் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த மூன்று பேரை நோக்கி T-56 துப்பாக்கியால் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதையடுத்து, சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளின்படி, இந்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் விபரங்கள்
ரத்தொலுகம, கட்டுவன வீதி, ஹோமாகம பகுதியை சேர்ந்த மொஹமட் அஸ்மன் ஷெரீப்டீன் என்ற நபரே இவ்வாறு பொலிஸாரால் தேடப்படுகின்றார். சந்தேகநபரின் புகைப்படம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.
இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
சீதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071 8591637
சீதுவை பொலிஸ் நிலையம்: 0112 253 522
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 18 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
