தென்னிலங்கையில் பொலிஸ் சுற்றிவளைப்பு - பெண்கள் உட்பட நால்வர் கைது
பயாகல பொலிஸ் பிரிவின் மக்கோன பகுதியில் பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த முறையற்ற விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் நேற்று இரவு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பெண்கள் கைது
இதன்போது நிலையத்தின் முகாமையாளரும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிலையத்தின் முகாமையாளரான சந்தேகநபர் 51 வயதுடையவர் எனவும் மூன்று பெண்களும் 23 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பேருவளை, அஹுங்கல்ல, கடவத்த மற்றும் ஹிங்குரான ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.