பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 750 மில்லியன் ரூபா சொத்துக்கள்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்யும் தமது பணியை மேற்கொள்வதால் யுக்திய நடவடிக்கையை மேலும் ஆறு மாதங்களுக்கு அமுல்படுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 17ஆம் திகதி முதல் ஜனவரி 11ஆம் திகதி வரை யுக்திய நடவடிக்கையில் 18,445 போதைப்பொருள் சோதனைகள் நடத்தப்பட்டு 147 கிலோ ஹெராயின், 260 கிலோ ஐஸ், 2700 கிலோ கஞ்சா, 363,438 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டன.
அதேபோன்று, யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து 50,999 சந்தேக நபர்களும் 1,377 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 1,835 பேருக்கு தடுப்புக் காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளது.
யுக்திய நடவடிக்கை
போதைப்பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளும் தந்திரோபாய ரீதியாக தமது வேலையை செய்வதால் இந்த யுக்திய நடவடிக்கை குறைந்தது இன்னும் ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். போதைப்பொருள் தட்டுப்பாட்டால், பல்வேறு வகையான மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றனர்.
குற்றவாளிகளிடம் பணம் இருப்பதால், துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களையும், அவர்களின் செயல்களுக்குத் தேவையான ஆட்களையும் வேலைக்கு அமர்த்தும் திறமையும் இருப்பதால், இந்தக் குற்றங்களைத் தடுக்க மக்களின் ஆதரவு தேவையாக உள்ளது.
சிறப்பு அதிரடிப்படை
கஞ்சா சோதனை நடத்த ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் சிறப்பு அதிரடிப்படை அதற்கு நிறைய ஆதரவை வழங்குகிறது.
பெலியத்தேயில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனைகளை நடத்திய அதிகாரிகள் 750 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை கைப்பற்றியுள்ளனர்.

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
