எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! தயார் நிலையில் பொலிஸார்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலவரத்தை உருவாக்கும் நபர்கள் தொடர்பில் வீடியோ பதிவு செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
வழக்குத் தொடரப்படும்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடக்கும் கலவரம், மோதல்கள் போன்ற அனைத்து சம்பவங்களையும் வீடியோவாக பதிவு செய்யுமாறு நிரப்பு நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
வீடியோ காட்சிகளின் நகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கொடுத்து பொலிஸ் புத்தகங்களில் பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தொடர்வதற்கு இந்தக் காணொளிகள் பயன்படுத்தப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் தனது உத்தரவில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
