கொழும்பில் பட்டப்பகலில் நடந்த பரபரப்பு - மர்ம கும்பலால் கடத்தப்பட்ட பெண் - பொலிஸார் துப்பாக்கி சூடு
கொழும்பில் வைத்து இன்று(29) இளம் பெண் ஒருவர் நபர்களால் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸாரினால் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி, நாவல வீதியிலுள்ள பொலிஸ் வீதித் தடையை மீறி செல்ல முற்பட்ட வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் வாகனத்தையும் பெண்ணையும் கைவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இளம் பெண் கடத்தல்
கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் வாகனத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு இன்று பிற்பகல் கிடைத்த தகவலுக்கு அமைய, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையக் குழுவினர் குறித்த வாகனத்தை வீதித் தடையில் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
எனினும், வாகனம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து சென்றமையால், பொலிஸார் அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், 26 வயதான குறித்த பெண் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்ற நபர்களை கைது செய்யும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.