மதுபோதையில் வாகனமோட்டிய பொலிஸ் அதிகாரியின் சேவை இடைநிறுத்தம்
குடிபோதையில் வாகனமோட்டிய மட்டக்களப்பு பிரதேசத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவரே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரி கைது
மதுபோதையில் வாகனம் ஓட்டிய நிலையில் கடந்த 16ஆம் திகதி அம்பாறை காவன்திஸ்ஸ வித்தியாலயத்தின் அருகே குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார்.

அம்பாறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் தொடக்கம் அவரது சேவையை இடைநிறுத்தி மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே எதிர்வரும் 23ம் திகதி குறித்த பொலிஸ் அதிகாரியை அம்பாறை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri