52 கிலோ கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் அதிகாரி கைது
சுமார் 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள 52 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவினர், ஹிக்கடுவை பிரதேசத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி சீருடையில் இருக்கும் போதே ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இந்த அதிகாரி தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.