புலனாய்வுகளின் போது பொலிஸார் உரிமையை பாதுகாக்க வேண்டும் : மனித உரிமைகள் இணைப்பாளர் வலியுறுத்தல்(Video)

Human Rights Commission Of Sri Lanka Ampara Human Right Day Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Farook Sihan Jun 26, 2023 12:04 PM GMT
Farook Sihan

Farook Sihan

in சமூகம்
Report

புலனாய்வுகளின் போது சந்தேகநபர்களை சித்திரவதைக்குள்ளாக்காமலும் இழிவான நடத்துகைக்குள்ளாக்காமலும் பொலிஸார் அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச சித்திரவதைக்கு எதிரான தினத்தையொட்டி கல்முனை பிராந்தியத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வு இன்று (26.06.2023)முன்னெடுக்கப்பட்டிருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ''1994 ஆம் ஆண்டின் 22ம் இலக்க சித்திரவதை மற்றும் வேறு கொடுரமான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்தரமான நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றிற்கு எதிரான சமவாய சட்டம் ஒன்றை இலங்கை அரசு உள்வாங்கி அதனை (20.12.1994) இல் அத்தாட்சிப்படுத்தியது.

விசாரணைகள் பிற்போடப்படல்

புலனாய்வுகளின் போது பொலிஸார் உரிமையை பாதுகாக்க வேண்டும் : மனித உரிமைகள் இணைப்பாளர் வலியுறுத்தல்(Video) | Police Must Protect Rights During Investigations

இந்நிலையில் சிறுவர் பாலியல் தொந்தரவுகள், பாலியல் பலாத்காரங்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டாலும் அவைகள் சில நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல் சமாதானப்படுத்தப்பட்டு வருகின்றமை கவலைக்குரியது. இதனால் தப்புச் செய்கின்றவர்கள் இலகுவில் தப்பித்துக் கொள்கின்றனர்.

இதற்கு சாட்சிகள் முன்வராமை சமூகத்தின் ஏளனமான பார்வை ஆதாரங்கள் அழிக்கப்படல் என்பவைகள் வழக்கொன்றை தொடர்வதற்கு பலமற்ற விடயங்களாக இருக்கின்றது. எம்மில் அனேகமானவர்களுக்கு பாலியல் தொந்தரவானது இலங்கைச் சட்டத்தில் குற்றம் என எழுதப்பட்டுள்ள விடயம் என்னவென்பது தெரியாது என்றே கூற வேண்டும்.


அடிப்படை உரிமை மீறல்

இது பற்றி 1995ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க தண்டணை சட்டக் கோவை சட்டத்தின்படி இக்குற்றம் பற்றி வறையறை செய்யப்பட்டுள்ளது. சித்திரவதைகளைக் கட்டுப்படுத்த பாரிய பங்களிப்பைச் செய்கின்ற இடம்தான் நீதவான் நீதிமன்றம் இங்குதான் ஆரம்ப கட்டத்தில் அதிகமானோர் வருகின்றனர்.

புலனாய்வுகளின் போது பொலிஸார் உரிமையை பாதுகாக்க வேண்டும் : மனித உரிமைகள் இணைப்பாளர் வலியுறுத்தல்(Video) | Police Must Protect Rights During Investigations

அதில் சிறு தொகையினரே உயர் நீதிமன்றம் செல்கின்றனர். இலங்கை அரசியல் அமைப்பின் அத்தியாயம் மூன்றாம் அத்தியாயத்தில் பதினோராம் உறுப்புரையில் உடல் ரீதியாகவோ உள ரீதியாகவோ ஒரு மனிதனை சித்திரவதை செய்வது அடிப்படை உரிமை மீறல் எனவும் ஒருவரை தொல்லைக்கு உட்படுத்துவது துன்புறுத்தும் செயலாக சட்டம் கருதுகிறது.

ஒரு பிள்ளையை சொற்களின் மூலமாக அல்லது வேறொரு விதத்தில் பாலியல் இம்சைக்குள்ளாக்குதல் குற்றம் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளது" என்றார்.

இந்நிகழ்வில் சித்திரவதை பற்றிய மருத்துவ ரீதியான கருத்துக்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி முஹம்மட் றிபாஸ் நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US