புலனாய்வுகளின் போது பொலிஸார் உரிமையை பாதுகாக்க வேண்டும் : மனித உரிமைகள் இணைப்பாளர் வலியுறுத்தல்(Video)
புலனாய்வுகளின் போது சந்தேகநபர்களை சித்திரவதைக்குள்ளாக்காமலும் இழிவான நடத்துகைக்குள்ளாக்காமலும் பொலிஸார் அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச சித்திரவதைக்கு எதிரான தினத்தையொட்டி கல்முனை பிராந்தியத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கான செயலமர்வு இன்று (26.06.2023)முன்னெடுக்கப்பட்டிருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ''1994 ஆம் ஆண்டின் 22ம் இலக்க சித்திரவதை மற்றும் வேறு கொடுரமான மனிதாபிமானமற்ற அல்லது கீழ்தரமான நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றிற்கு எதிரான சமவாய சட்டம் ஒன்றை இலங்கை அரசு உள்வாங்கி அதனை (20.12.1994) இல் அத்தாட்சிப்படுத்தியது.
விசாரணைகள் பிற்போடப்படல்
இந்நிலையில் சிறுவர் பாலியல் தொந்தரவுகள், பாலியல் பலாத்காரங்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டாலும் அவைகள் சில நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படாமல் சமாதானப்படுத்தப்பட்டு வருகின்றமை கவலைக்குரியது. இதனால் தப்புச் செய்கின்றவர்கள் இலகுவில் தப்பித்துக் கொள்கின்றனர்.
இதற்கு சாட்சிகள் முன்வராமை சமூகத்தின் ஏளனமான பார்வை ஆதாரங்கள் அழிக்கப்படல் என்பவைகள் வழக்கொன்றை தொடர்வதற்கு பலமற்ற விடயங்களாக இருக்கின்றது. எம்மில் அனேகமானவர்களுக்கு பாலியல் தொந்தரவானது இலங்கைச் சட்டத்தில் குற்றம் என எழுதப்பட்டுள்ள விடயம் என்னவென்பது தெரியாது என்றே கூற வேண்டும்.
அடிப்படை உரிமை மீறல்
இது பற்றி 1995ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க தண்டணை சட்டக் கோவை சட்டத்தின்படி இக்குற்றம் பற்றி வறையறை செய்யப்பட்டுள்ளது. சித்திரவதைகளைக் கட்டுப்படுத்த பாரிய பங்களிப்பைச் செய்கின்ற இடம்தான் நீதவான் நீதிமன்றம் இங்குதான் ஆரம்ப கட்டத்தில் அதிகமானோர் வருகின்றனர்.
அதில் சிறு தொகையினரே உயர் நீதிமன்றம் செல்கின்றனர். இலங்கை அரசியல் அமைப்பின் அத்தியாயம் மூன்றாம் அத்தியாயத்தில் பதினோராம் உறுப்புரையில் உடல் ரீதியாகவோ உள ரீதியாகவோ ஒரு மனிதனை சித்திரவதை செய்வது அடிப்படை உரிமை மீறல் எனவும் ஒருவரை தொல்லைக்கு உட்படுத்துவது துன்புறுத்தும் செயலாக சட்டம் கருதுகிறது.
ஒரு பிள்ளையை சொற்களின் மூலமாக அல்லது வேறொரு விதத்தில் பாலியல் இம்சைக்குள்ளாக்குதல் குற்றம் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளது" என்றார்.
இந்நிகழ்வில் சித்திரவதை பற்றிய மருத்துவ ரீதியான கருத்துக்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி முஹம்மட் றிபாஸ் நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |













இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
