தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்படுகின்றதா என்பது குறித்து சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு
தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்படுகின்றதா என்பது குறித்து சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் எனபனவற்றில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்படுகின்றதா என்பது கண்காணிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் முகக் கவசம் அணிந்திருக்கின்றார்களா, சமூக இடைவெளி பேணப்படுகின்றதா ஏனைய தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்படுகின்றனவா என்பது குறித்து பொலிஸார் கண்காணிக்க உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போது மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை உரிய முறையில் பின்பற்றப்படவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்படுகின்றதா என்பதனை கண்காணிக்குமாறும், சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ளுமாறும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.