இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
தங்க நகை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கல்பிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச்சென்று 37 கிலோ தங்கத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்பிட்டி நீதவான் நீதிமன்றம் 5 சந்தேகநபர்களை பெயரிட்டுள்ளது.
சந்தேகநபர்களின் புகைப்படங்கள்
சந்தேகநபர்கள் மெனிகின்ன, காலி, புத்தளம் மற்றும் குன்னேபான ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த சந்தேகநபர்கள் தமது பிரதேசங்களை விட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, பின்வரும் புகைப்படங்களில் காட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், 071 859 1763 அல்லது 071 859 4916 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
