கிளிநொச்சியில் பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகரின் வழிகாட்டலிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கம்மனின் ஆலோசனையிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இருவர் கைது
பொலிஸ் பரிசோதகர் பஸ்நாயக்க தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விநாயகபுரம் பகுதியில் வைத்து 24 வயதுடைய கணவரும், 20 வயதுடைய மனைவியும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் கிளிநொச்சி உதயநகர், அம்பாள்குளம், விநாயகபுரம், சாந்தபுரம் மற்றும் கனகாம்பிகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 வீடுகளில் பகல் நேரங்களில் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட 10 பவுண்களுக்கு அதிகமான தங்க நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதியரும் மீட்கப்பட்ட பொருட்களும் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam