பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
கொழும்பு - கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோக் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
பேருந்தில் மோதி உயிரிழந்த குறித்த நபரை அடையாளம் காண்பதற்கு கோட்டை பொலிஸார் இவ்வாறு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த விபத்து கடந்த பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலம்
45 முதல் 50 வயது மதிக்கத்தக்க 5 அடி உயரமுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் கோட்டை பொலிஸ் நிலையத்தின் 071 8591555 அல்லது 011 2323677 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
YOU MAY LIKE THIS
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
