இலங்கையின் வரலாற்றில் பொலிஸ் துறையின் இரண்டு முக்கிய பதவிகளில் வெற்றிடங்கள்
இலங்கையில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதில் உள்ள சிக்கல்நிலை இன்று வரை தொடர்கிறது
எனினும் இந்த கால சிக்கல்நிலை நீண்டு செல்லுமாக இருந்தால், அது பொலிஸ் துறையின் ஏனைய செயல்பாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று மூத்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்
குறிப்பாக செயல்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்கள், ஆவணங்களில் கையொப்பமிடுதல் மற்றும் கேள்விப்பத்திரங்களை அழைப்பது உள்ளிட்ட பிற செயல்பாடுகள் உள்ளன,
இந்த செயற்பாடுகளுக்கு பொலிஸ் மா அதிபர் அல்லது செயல் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதல்கள் தேவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் திணைக்களம்
இந்த பிரச்சினைகளை சுமார் ஒரு வாரத்திற்கு குறுகியகாலத்திற்கு பொலிஸ் திணைக்களத்தினால் நிர்வகிக்க முடியும்.
எனினும் அதற்கும், ஜனாதிபதி அல்லது அரசாங்கத்திடமிருந்து தங்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்படும் என்று அந்த அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

ஏற்கனவே நிர்வாகப்பிரிவுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியும் வெற்றிடமாக உள்ளது.
இந்தநிலையில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் இல்லாமை நிலைமையை சிக்கலாக்கியுள்ளது என்றும் பொலிஸ் தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நிலந்த ஜயவர்தன கடந்த வாரம் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை அடுத்து பிரதி பொலிஸ் அதிபர் (நிர்வாகம்) பதவி வெற்றிடமாகியுள்ளது.

இந்தநிலையில் வரலாற்றில் முதன்முறையாக பொலிஸ் துறையில் இரண்டு உயர் பதவிகளும் வெற்றிடமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri