பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு பொலிஸ் காவலில் 24 சந்தேக நபர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (SLHRC) தகவல் வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வைத்தள்ள ஆயுதங்களை மீட்க இரகசிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை அடிக்கடி பதிவாகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பொறுப்பாகும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா வலியுறுத்தியுள்ளார்.
9,417 பொது முறைப்பாடுகள்
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் காவலில் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டிற்கான பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 9,417 பொது முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 44 யுக்திய நடவடிக்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 22 மணி நேரம் முன்

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள் News Lankasri

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி News Lankasri
