லண்டனில் பொலிசார் பொதுமக்களுக்கு இடையில் மோதல்
லண்டனில் பொது முடக்கத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் பொலிசார் மற்றும் பொது மக்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
லண்டனில் டெல்டா வகை கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து போரீஸ் ஜான்சன் அரசாங்கம் ஜூலை 19ஆம் திகதி வரை ஊரடங்கை நீட்டித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிய, பொது மக்கள் மற்றும் பொலிசார் சாலைகளில் கட்டிப் புரண்டு சண்டையிட்டதுடன் பொலிஸார் மீது டென்னிஸ் பந்துகளை ஏறிந்து ஆர்ப்பாட்டகாரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல உலக செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,