ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க உயர் பொலிஸ் அதிகாரி முயற்சி
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் பொலிஸ் திணைக்களத்தில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.
ஊழல்பேர்வழிகளை திருப்திப்படுத்தும் நோக்கம்
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பேர் போன இந்த உயர் பொலிஸ் அதிகாரி அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தும் நோக்கில் அடிக்கடி சட்டவிரோத உத்தரவுகளை பிறப்பித்து வருவதாக ஊடகங்களில் ஏராளம் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனது சட்டவிரோத உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளை விலக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பது தொடர்பில் தீவிர முயற்சியொன்றை மேற்கொண்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதற்காக அவர் ஊழல் சம்பவங்களில் தொடர்புடைய, தனக்கு நெருக்கமான 30 அதிகாரிகளின் பெயர்ப்பட்டியல் ஒன்றையும் தயாரித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய உயர் பொலிஸ் அதிகாரி, கடந்த மே மாதம் நடைபெற்ற காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.