பேசாலையில் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையில் சிக்கிய மூவர் (Photo)
மன்னார் - பேசாலை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து கடத்த முயன்றது சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் வலம்புரி சங்கு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று(25) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கைகளின் போதே கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள்
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 39 வயதுக்குட்பட்ட புத்தளம் மற்றும் பேசாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்க அலுவலகத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

