யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதலுக்கு முயற்சித்தவருக்கு நேர்ந்த கதி
யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த நபர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோண்டாவில் செபஸ்ரியன் வீதி பகுதியிலுள்ள வீட்டில், மது போதையில் இளைஞரொருவர் தாய் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி அட்டகாசம் செய்துள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் பிரிவு மற்றும் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.
இதன்போது அவர் வீட்டில் இருந்த வாள் மூலம் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ள முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனை அடுத்து பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி சந்தேகநபரை மடக்கி பிடித்து வாளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam