தாயாருக்குப் பதில் எட்டு வயதுக்குழந்தையை கைது செய்த பொலிஸார்
நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண்ணொருவரைக் கைதுசெய்ய முடியாத நிலையில் அவரது எட்டுவயதுக் குழந்தை பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் வெலிஓயா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தாயார் வந்து பொலிஸில் சரணடைந்து...
வெலிஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் வசிக்கும் பெண்ணொருவருக்கு நீதிமன்றம் மூலம் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணின் வீடு தேடிச் சென்ற போது, அவர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் தனிமையில் இருந்த எட்டு வயதுக்குழந்தையை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து வந்து தடுத்து வைத்துள்ளனர்.
அதன் பின் குழந்தையின் தாயார் வந்து பொலிஸில் சரணடைந்த பின்னரே குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
எனினும் குழந்தையின் தாயார் பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தர்ப்பத்தில் குழந்தை தனிமையில் இருந்த காரணத்தினால் அதன் பாதுகாப்புக்காகவே பொலிஸ் நிலையம் அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
