தோல்வியை அனுபவிக்கத் தயார்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு
தேர்தலை ஒத்திப்போடும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை, வெற்றியை அனுபவித்தது போல் தோல்வியை அனுபவிப்பதற்கும் நாங்கள் தயார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,“பிழை பிழைதான். பிழை நிகழ்ந்தால் அதை சரி என்று சொல்லமாட்டேன்.
தேர்தல் செலவீனம்
தேர்தலை நடத்த வேண்டும் என்று சொல்பவர்களுக்குச் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நிறுத்துமாறு கூறுவதற்கு உரிமை இல்லை.
இந்தக் கொண்டாடத்திற்கு 20 கோடி ரூபாதான் செலவு. ஆனால் தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபா. இதில் எது அதிக தொகை என்று பார்க்க வேண்டும்.
அந்த ஆயிரம் கோடி செலவு செய்வது பரவாயில்லை. 20 கோடி செலவு செய்வதுதான் இவர்களுக்கு வீண்விரயமாகத் தெரிகின்றது.
போர் வெற்றியைக் கொண்டாடுவது போல் சுதந்திரதினமும் கொண்டாடப்பட வேண்டும். எமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
பொருளாதார நிலைமையில் முன்னேற்றம்
இப்போது பொருளாதார நிலைமை மெல்ல மெல்ல முன்னேறி வருகின்றது. எரிபொரு வரிசை, பால்மா வரிசை எல்லாம் இப்போது இல்லை.
சுற்றுலா துறை முன்னேறி வருகின்றது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தேர்தலை ஒத்திப்போடும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. தோல்வியை அனுபவிப்பதற்கும் நாங்கள் தயார். வெற்றியை அனுபவித்தது போன்று தோல்வியை அனுபவிப்பதற்குத் தயார்.” எனத் தெரிவித்துள்ளார்.


தேர்தல்வாதிகளே சிந்தியுங்கள்..! 1 நாள் முன்

இளவரசர் ஹரியுடன் அந்தரங்க உறவு: 21 ஆண்டுகள் தந்தையிடம் மறைத்த பெண் தற்போது வெளியிட்டுள்ள தகவல் News Lankasri

ஜெயிலில் இருந்து ரிலீஸான கண்ணம்மா: இஷ்டத்துக்கு பணத்தை செலவு செய்யும் பாரதி! வெளியானது முதல் ப்ரோமோ காட்சி Manithan

குழந்தை நட்சத்திரம் நடிகை சாராவா இது? கையில் சிகரெட்டுடன் வெளியான புகைப்படம்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Manithan

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த பூகம்பம்! சீட்டு கட்டுகள் போல சரிந்த பிரம்மாண்ட கட்டிடங்களின் வீடியோ News Lankasri
