ஆளுநர் பதவிகளை பகிர்ந்து கொண்ட பொதுஜன பெரமுன மற்றும் ஐ.தே.கட்சி
மாகாண ஆளுநர்களை நியமிப்பது சம்பந்தமாக பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொட்டுக்கட்சிக்கு 5 பதவிகள் மற்றும் ஐ.தே.கட்சிக்கு 4 பதவிகள்
இதனடிப்படையில் 9 ஆளுநர் பதவிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 5 பதவிகளும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு நான்கு பதவிகளும் வழங்கப்படும் வகையில் ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த யோசனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற போதிலும் இறுதியில் இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்துள்ளனர். மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.