குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடியவர் கைது! தீவிரப்படுத்தப்படும் விசாரணை
குமண தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து, வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியைப் படகு மூலம் கடத்திச் சென்றவர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
அத்துடன், அதிரடிப்படையினரின் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது இரண்டு வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, கடற்கரைப் பகுதியில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 57 கடலாமை முட்டைகள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
அதே போன்று, மற்றுமொரு சோதனையில் 17 கிலோ கிராம் மானிறைச்சி 56 கிலோ கிராம் காட்டு எருமை இறைச்சி மற்றும் 16 கிலோ கிராம் மான் மற்றும் எருமையின் ஈரல் என்பன மீட்கப்பட்டுள்ளது.
6 பேர் கைது
மேலும், கடல் வழியாக இந்த இறைச்சிகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு பைபர் படகு, 25 குதிரைத்திறன் கொண்ட வெளிச்செல்லும் இயந்திரம் (Outboard engine) மற்றும் இரண்டு எரிபொருள் கொள்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடை, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட இறைச்சி மற்றும் ஏனைய பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக லாகுகலை வனஜீவராசிகள் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri