சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் ஹரிணி
பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனா செல்ல உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுக் கொள்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒக்டோபரில் பீஜிங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார்.
அதேபோன்று சீனாவின் ‘ஒரு சீன’ கொள்கையையும் எமது வெளிநாட்டுக் கொள்கைளின் ஊடாக ஸ்திரமாக ஏற்றுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



