கோவிட் சடலங்களை அடக்கம் செய்யலாம் என பிரதமர் கூறவில்லை - கோகிலா! மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய தகவல்
கோவிட்-19 சடலங்களை அடக்கம் செய்யலாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறவில்லை என இலங்கை பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து பிரதமர் எதனையும் கூறவில்லை.
பொதுவாக உயிரிழப்போரை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்றே பிரதமர் நேற்று முன் தினம் நாடாளுமன்றில் கூறியுள்ளார்.
கோவிட்-19 சடலங்களை அடக்கம் செய்வது குறித்து ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ அல்லது ஆளும் கட்சிக்கோ தீர்மானங்களை எடுக்க அதிகாரம் கிடையாது.
நாடாளுமன்றில் சிலர் பாலர் பாடசாலை பிள்ளைகள் இருப்பதனால் இவ்வாறு பிரதமரினால் கோவிட்-19 சடலங்கள் பற்றிப் பதிலளிக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கோவிட் தொற்றில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பிரதமர் அனுமதி
பிரதமரை அவதூறு செய்ய வேண்டாம் - அரசாங்கத்திடம் ரவூப் ஹக்கீம் கோரிக்கை
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam