சர்ச்சைக்குரிய திரவ இயற்கை எரிவாயு ஒப்பந்தம்! - விளக்கமளித்துள்ள பிரதமர்
சர்ச்சைக்குரிய திரவ இயற்கை எரிவாயு ஒப்பந்தத்தை முன்னெடுக்கும் முடிவு குறித்து, பொதுஜன பெரமுன கூட்டணி உறுப்பினர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) விளக்கமளித்துள்ளார்.
பிரதமர், இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அலரி மாளிகையில் சந்தித்து அவர்களுடன் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கெரவலப்பிட்டியில் உள்ள "யுகதானவி" மின்சார நிலையத்தின் (Yugadanavi Power Plant) நன்மை குறித்து பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இலங்கையில், LNG ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த New Fortress Energy நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.