முன்பள்ளி விவகாரத்தில் தலையிடும் தோட்ட நிறுவனங்கள்: கண்டனம் தெரிவித்த பொதுமக்கள்!
மலையகத்தில் உள்ள 70 சதவீதமான பிள்ளைகளுக்கு முன்பள்ளி கல்வி கிடைக்கவில்லை என பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் இயங்கும் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பாக நேற்று(14.02.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்பள்ளி கல்வி அவசியம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் முதலில் அரசாங்த்திற்கு நன்றி தெரிவிக்கிறோம் மலையக மக்களை மலையக மக்களாக அங்கரித்தனையிட்டு நன்றியினை தெரிவிக்கிறோம். இன்று மலையக மக்களின் காணி உரிமை வீட்டு உரிமை பற்றி பேசுகிறார்கள்.

ஆனால் மலையகத்தில் உள்ள 70 சதவீதமான பிள்ளைகளுக்கு முன்பள்ளி கல்வி கிடைக்கவில்லை. 30 சதவீதமானவர்களுக்கு மாத்திரம் தான் முன்பள்ளிக்கல்வி கிடைக்கின்றது. அப்படியானால் மலையகத்தில் எதிர்காலத்தில் முன்பள்ளிக் கல்வியின் நிலைமை என்ன என்றொரு கேள்வி இருக்கிறது.
இந்த நாட்டில் முறைசார் கல்வி அரசாங்கத்தின் கீழும் முன்பள்ளிக்கல்வி மாகாண சபையின் கீழும் இருக்கிறது. ஆகவே, இந்த நாட்டிலே எந்தப்பகுதியிலே முன்பள்ளி நடந்தாலும் அந்த முன்பள்ளி மாகாண சபையின் அதிகாரத்திற்கு கீழே நடப்பதாக இருக்க வேண்டும்.
ஆனால் பெருந்தோட்டப்பகுதிகளிலே மாகாண சபைகளினால் அந்த முன்பள்ளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை, தோட்ட நிர்வாகங்கள் அந்த முன்பள்ளிகளை நடத்துவதற்கு தடை செய்கின்றன. ட்ரஸ்ட் எனப்படும் ஒரு நிறுவனம் தடை செய்கிறது. தோட்டக் கம்பனிகள் தலையீடு செய்கின்றன. பல இடங்களிலே ரதல்ல போன்ற இடங்களில் முன்பள்ளிகள் மூடப்பட்டு காணப்படுகின்றன.
முன்பள்ளிக் கல்விற்கு விசேடமாக மலையக மக்களின் கல்விற்கு இவ்வளவு தூரம் பாதகம் ஏற்படுகின்றது. இந்த பாதகத்தை தட்டிக்கேற்க முடியாத நிலையிலே இந்தச் சமூகம் இருப்பதினாலே இந்த உரிமையே பெற்றுக்கொடுக்க அதாவது முன்பள்ளிக்கல்வி அரசாங்கத்தினால் அங்கிகரீக்கப்பட்டிருப்பது போல பெருந்தோட்டப்பகுதியில் முன்பள்ளிக்கல்வி அங்கிகரீக்கப்பட வேண்டும்.
நிறுவனங்கள் தலையீடு வேண்டாம்
முன்பள்ளிக்கல்வியை கட்டுப்படுத்தும் நிறுவனமாக மாகாணசபை இருக்க வேண்டும். தோட்டக் கம்பனிகள், ட்ரஸ்ட் நிறுவனங்கள் முன்பள்ளிகளில் தலையீடு செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கிறோம்.

இந்நிலையில், இந்த மாதம் 22ஆம் திகதி ஹட்டன் மாநகரில் முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து மாபெரும் போராட்டத்தினை நடத்த இருக்கிறோம்.
முன்பள்ளிக்கான உரிமையை கொடுங்கள் முன்பள்ளிக்கான அங்கிகாரத்தினை கொடுங்கள். முன்பள்ளிகளில் மற்றவர்களின் தலையீடுகளை நிறுத்துங்கள் என கோருவதோடு அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என உறுதியளித்துள்ளார்.
வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை அரச சொத்துக்கள்! சிக்கலில் இருந்து தப்பிக்க நாமல் தீட்டும் சதித்திட்டம்
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam