நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள சுகாதாரத்துறை சிற்றூழியர்கள்
ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத்துறை சிற்றூழியர்கள் நாளைய தினம் நாடளாவிய ரீதியில் சில மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஊழியர்களுக்கும் கோவிட் கால விசேட கொடுப்பனவு, விசேட விடுமுறை நாட்களில் கடமைக்கு சமூகமளித்தல், விசேட கொடுப்பனவு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலமையில் கோவிட் தடுப்பு செயலணி அமைத்தல் உட்பட ஒன்பது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் நாளைய தினம் நோயாளர் நலன்கருதி சில மணி நேரங்கள் மாத்திரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார சிற்றூழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாட்டிலுள்ள போதனா வைத்தியசாலைகளில் காலை எட்டு மணியிலிருந்து பணிப்புறக்கணிப்பும், ஏனைய வைத்தியசாலைகளில் மதியம் 12 மணியிலிருந்து 12:30 வரையும் பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

