டெக்சாஸ் நெடுஞ்சாலையில் விமான விபத்து: பயணிகளை மீட்ட பொதுமக்கள்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள லாரெடோ நகரின் பரபரப்பான நெடுஞ்சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய அடுத்த சில நொடிகளில் அந்த விமானம் பயங்கர தீப்பிழம்புகளுடன் எரியத் தொடங்கியது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்களும், வாகன சாரதிகளும் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சம்பவ இடத்திற்கு விரைந்து ஓடினர்.
மீட்பு நடவடிக்கை
எரியும் விமானத்திற்குள் சிக்கி தவித்த பயணிகளை ஜன்னல்கள் மற்றும் இடிபாடுகளுக்கு இடையே இருந்து அவர்கள் மிகவும் சாமர்த்தியமாகவும், துணிச்சலாகவும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இந்த கோர விபத்தில் துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களின் உடனடி மற்றும் துணிச்சலான மீட்பு நடவடிக்கையால் விமானத்தில் இருந்த மற்ற ஐந்து பேர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த பரபரப்பான மீட்பு காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றன.
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam