இலங்கையில் இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்க திட்டம்!
அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கு கிடைத்துவிடும்.
இந்த நிலையில் அனைவருக்கும் இலவசமாக இந்த தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தொற்று நோயியல் தலைமை நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
எந்த தடுப்பூசிகள் கிடைத்தாலும் நான்கு வாரங்களுக்கு ஒருமுறை என்ற அளவில் இரண்டு தடவைகள் இந்த தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி ஒன்றின் விலை 20 டொலர்களாகும். ஒக்ஸ்போட்- என்ட்ராசெனேக்கா தடுப்பூசியின் விலை 3 டொலர்களாக உள்ளது.
இதில் பெரும்பாலும் ஒக்ஸ்போட்- என்ட்ராசெனேக்கா தடுப்பூசியே இலங்கைக்கு பொருத்தமாக இருக்கும் என்று ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 2021 ஜனவரி 15ஆம் திகதியன்று இந்த தடுப்பூசிகளுக்கான விண்ணபத்தை சமர்ப்பிக்கும் இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தடுப்பூசிகள் ஒரு லட்சத்துக்கு 55 ஆயிரம் முன்னிலை சுகாதாரப் பணியாளர்கள், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 படையினர், 60 அகவைக்கும் மேற்பட்ட 31 லட்சத்து 59 ஆயிரத்து 800 தொற்றா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 55க்கும் 59 அகவைக்கும் உட்பட்ட 11 லட்சத்து 78 ஆயிரத்து 154 பேர் ஆகியோருக்கு முதல் கட்டமாக வழங்கப்படவுள்ளன.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam