2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க திட்டம்: சுற்றுலாத்துறை அமைச்சர்
இலங்கை சுற்றுலாத்துறையானது 2024ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைத்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் 33 வீதமானோர் மீண்டும் மீண்டும் வருபவர்கள் என்பது சுற்றுலாத்துறைக்கு உத்வேகம் அளிக்கிறது.
இதன்படி, உலகம் முழுவதிலுமிருந்து 100 முதல் 150 முறை வரை இலங்கைக்கு மீண்டும் மீண்டும் வந்தவர்களும் உள்ளனர்.
சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி
இலங்கை, சுற்றுலாப்பணிகளுடன் ஒரு ஆழமான பிணைப்பை உருவாக்குகிறது, அதன் விளைவாக, பயணிகளின் வருகை தொடர்ச்சியாக இருக்கின்றது.

2024இன் முதல் சில மாதங்களில், நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது.அதிலும் பெப்ரவரி மாதம் மொத்தம் 218,350 சுற்றுலாப் பயணிகளின் வருகையை நாடு பதிவுசெய்துள்ளது.
இதற்கு முன்னர் 2020 ஜனவரியில் 200,000 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்ததன் பின்னர் இதுவே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையாகும்." என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam