நாட்டின் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பில் அரசு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்காலத்தில் மதஸ்தலங்கள் பதிவு செய்யப்படும் என புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் (19.07.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, மகாநாயக்கர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடன் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்படி, எதிர்காலத்தில் கிராம உத்தியோகத்தர்களின் எல்லைக்குள் இருக்கக்கூடிய வழிபாட்டுத்தலங்களுக்கான அளவுகோல்களை தயாரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
