பிள்ளையானால் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - அரசு எடுத்துள்ள நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியது.
குற்றப் புலனாய்வு திணைத்தளத்தின் கோரிக்கையின் பேரில் தடுப்பு காவலில் உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனிடம், (பிள்ளையான்) ரணில் விக்ரமசிங்க பேச வேண்டும் என கூறி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த, சம்பவமே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
பாதுகாப்பு அதிகாரி
பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
குறித்த இடமாற்றம் பதில் பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் மஞ்சத்திருவிழா





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 15 மணி நேரம் முன்

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam
